தரையில் தவழ்ந்து
எழும்பி இருந்து
பிடித்து நடந்து
அடித்து ஓடி
இடறி விழுந்து
மீண்டும் எழுந்து
குருதி துடைத்து
உள்ளங்கள் குடைந்து
செல்வங்கள் தேடி
உற்றாரை உதைத்து
உதவாதோர் அணைத்து
ஊர்விட்டுச்சென்று
போர்பல கண்டு
வேர்விட்டு வளர்ந்து
நீர் தேடியலைந்து!
காரிகை கண்டு
பேருவகை கொண்டு
பேரிருள் நாடி
இருவரும் ஓடி
சிரிப்பினை வாடகைக்கெடுத்து
செருப்புப்போல் அப்பப்போ
அணிந்து கொண்டு
நெருப்புக்கள் கடந்து
முட்களை மிதித்து
சண்டை செய்து
பின்னர் சமாதானமடைந்து
நஞ்சை உணவாயும்
உணவு நஞ்சையும்
நெருப்புக்கள் கடந்து
முட்களை மிதித்து
சண்டை செய்து
பின்னர் சமாதானமடைந்து
நஞ்சை உணவாயும்
உணவு நஞ்சையும்
மாறி மாறி
உணர்வின்றி உட்கொண்டு !
பட்டுச்சட்டை படாடோப
வாழ்க்கை
போட்டாபோட்டி
போட்டுக்கிட்டு
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான்
வெட்டாத குளியைத்தேடி
நீயாக விழுவாய் சிலவேளை
வீழ்ந்துவிடா விடினும்
கொண்டு சென்று புதைப்பார்கள்
உன் பேழை !
உணர்வின்றி உட்கொண்டு !
பட்டுச்சட்டை படாடோப
வாழ்க்கை
போட்டாபோட்டி
போட்டுக்கிட்டு
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான்
வெட்டாத குளியைத்தேடி
நீயாக விழுவாய் சிலவேளை
வீழ்ந்துவிடா விடினும்
கொண்டு சென்று புதைப்பார்கள்
உன் பேழை !
உமர் அலி முகம்மதிஸ்மாயில்
இன்று கவிதை வயலுக்கு எழுதியது
0 கருத்துக்கள்:
Post a Comment