காலையில் சூரியனாகவும்
மாலையில் சந்திரனாகவும்
மாறி மாறி உதிக்கின்றாய்!
தென்றலாக
தடவிச் செல்கின்றது
காற்று வடிவெடுத்த
இனிய முகம்!
தேனமுதாக
என்னை தீண்டுகின்றது
உன் இசை முகம்
வண்ணத்துப்பூச்சியின்
வடிவத்தில்
வட்டமடிக்கும் வண்ணமுகம்!
தேன் சிந்திச் சிரிக்கின்ற
பூமுகமும்
மறக்க முடியாமல்
ஐம்புலனில்
விழுந்து மனச்சட்டகத்தில்
சிதையாத ஓவியமாய்!
மாலையில் சந்திரனாகவும்
மாறி மாறி உதிக்கின்றாய்!
தென்றலாக
தடவிச் செல்கின்றது
காற்று வடிவெடுத்த
இனிய முகம்!
தேனமுதாக
என்னை தீண்டுகின்றது
உன் இசை முகம்
வண்ணத்துப்பூச்சியின்
வடிவத்தில்
வட்டமடிக்கும் வண்ணமுகம்!
தேன் சிந்திச் சிரிக்கின்ற
பூமுகமும்
மறக்க முடியாமல்
ஐம்புலனில்
விழுந்து மனச்சட்டகத்தில்
சிதையாத ஓவியமாய்!
உமர் அலி முகம்மதிச்மாயில்
April 10 2014
0 கருத்துக்கள்:
Post a Comment