நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, April 6, 2014

காதல்

சிலருக்கு எதிர்பார்ப்பு
சிலருக்கு ஏமாற்றம்!
.......................

எட்டு நாளுக்கு மேல்
சிறகடித்து
வட்டமிடும் பட்டாம்பூச்சி!
.....................

சிலவேளை
இனிக்கின்ற வேப்பங்காய்!
சமயத்தில்
பொறுக்கின்ற பலாக்காய்!
....................

அமாவாசையிலும்
தரிசனம் தரும் பௌர்ணமி!
.....................

முளை திறன்
மாறாத
முளை விதை!
.....................

பிடிக்காததும்
பிடிக்கும்
காதலுக்காய்!
......................

நடிக்காதவனும்
நடிப்பான்
காதலிக்காய்!

0 கருத்துக்கள்:

Post a Comment