ஏனெனில் நான் கவிஞன்
பகுதி -2
எனக்குள் ஒரு ஆறாம் புலன்
ஆறுதலாக அடங்கிக் கிடக்கின்றது
கருவியும் ,கருக்குருவியும்
கதைப்பதெல்லாம்
செவியில் விழுகிறது
அப்படிக் கேட்கும்போதெல்லாம்
உள்ளமும் உருகிக் கரைந்து
கண்ணோரம் அருவியாகிறது !
மழைதேடி மனிதர்களுக்கு முன்
மரங்கள் மண்டியிட்டு
மன்றாடுவதைக்கேட்கும்போது
எனக்குள் பெரும்
திண்டாட்டம் வருகிறது !
வீதியோரத்தில்
நாதியற்றோர் நின்று
சில்லறைகளை குலுக்கும் ஒலி
எனக்கு மொழிபெயர்க்கப்பட்டே
ஒலிக்கிறது
அந்த உரை
தங்களது சரித்திரத்தை
மட்டுமன்றி
நோட்டுக்கலாக இருந்த நாம்
எப்படி இன்று இப்படி மாரறினோமென
விரித்து உரைக்கிறது !
வள்ளல்களின் கரங்களையும்
கஞ்சர்களின் மனங்களையும்
விலாவாரியாய் விபரிக்கின்றது
எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதோ
என்று ஏக்கப் பெருமூச்சும்
எக்கச்சக்கமாக இருந்தது !
ஒருநாள்
இறைச்சிக்கடை தராசு
தனக்குள்ளே தாராளமாக
பொருமியது
எனக்கு இப்படிக் கேட்டது
"என்னை எனது சோடியுடன்
சமனாக நிற்க
விடுகிறார்களேயில்லை
கோபத்தில்
நான் முரண்டுபிடித்தால்
என்னுள் அவர்கள் வேகமாக
இறைச்சியை எறியும்போது
வலிதாங்க முடியாமல் முதுகு கூனி
தாழ்ந்துபோகிறேன்.
வாய்மை எங்கோ தூரத்தில்
வீழ்ந்து போகின்றது
அவன் கல்லாவோ
அநியாயக் காசால்
அதிகம் நிறைந்து விடுகிறது
தொடரும்
மு.இ.உமர் அலி
2014 JULY 20 — with Mohamed Janofar, S Shifani Mohamed, Thaiyeeb Vellaiyan and 45 others.
பகுதி -2
எனக்குள் ஒரு ஆறாம் புலன்
ஆறுதலாக அடங்கிக் கிடக்கின்றது
கருவியும் ,கருக்குருவியும்
கதைப்பதெல்லாம்
செவியில் விழுகிறது
அப்படிக் கேட்கும்போதெல்லாம்
உள்ளமும் உருகிக் கரைந்து
கண்ணோரம் அருவியாகிறது !
மழைதேடி மனிதர்களுக்கு முன்
மரங்கள் மண்டியிட்டு
மன்றாடுவதைக்கேட்கும்போது
எனக்குள் பெரும்
திண்டாட்டம் வருகிறது !
வீதியோரத்தில்
நாதியற்றோர் நின்று
சில்லறைகளை குலுக்கும் ஒலி
எனக்கு மொழிபெயர்க்கப்பட்டே
ஒலிக்கிறது
அந்த உரை
தங்களது சரித்திரத்தை
மட்டுமன்றி
நோட்டுக்கலாக இருந்த நாம்
எப்படி இன்று இப்படி மாரறினோமென
விரித்து உரைக்கிறது !
வள்ளல்களின் கரங்களையும்
கஞ்சர்களின் மனங்களையும்
விலாவாரியாய் விபரிக்கின்றது
எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதோ
என்று ஏக்கப் பெருமூச்சும்
எக்கச்சக்கமாக இருந்தது !
ஒருநாள்
இறைச்சிக்கடை தராசு
தனக்குள்ளே தாராளமாக
பொருமியது
எனக்கு இப்படிக் கேட்டது
"என்னை எனது சோடியுடன்
சமனாக நிற்க
விடுகிறார்களேயில்லை
கோபத்தில்
நான் முரண்டுபிடித்தால்
என்னுள் அவர்கள் வேகமாக
இறைச்சியை எறியும்போது
வலிதாங்க முடியாமல் முதுகு கூனி
தாழ்ந்துபோகிறேன்.
வாய்மை எங்கோ தூரத்தில்
வீழ்ந்து போகின்றது
அவன் கல்லாவோ
அநியாயக் காசால்
அதிகம் நிறைந்து விடுகிறது
தொடரும்
மு.இ.உமர் அலி
2014 JULY 20 — with Mohamed Janofar, S Shifani Mohamed, Thaiyeeb Vellaiyan and 45 others.
0 கருத்துக்கள்:
Post a Comment