நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Sunday, July 20, 2014

இரவு வானம்

வானவீதியிலே வலம்போன
வள்ளல் ,
தான் கைநிறைய அள்ளிவந்த
வெள்ளித்துகள்களை
அள்ளி எறிந்து சென்றாரோ?

எண்ணிக் கணக்கிடலாம் என
அன்றிலிருந்து இன்றுவரை
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்
இன்னும் இயலாமல்தான் இருக்கிறது!

"சுபஹானல்லாஹ்"

மு.இ.உமர் அலி
நிந்தவூர் -2014 July 20

0 கருத்துக்கள்:

Post a Comment