சுடுசோறும் பழங்கறியும்
களிமண் சட்டியில
மிளகாய் அரைத்த கறி
முதல்நாள் சமைத்த கறி
அளவாய் தீய்ந்திருக்க
குறுணல் அரிசிச்சோறு
இடையில் குழைஞ்ச சோறு
இரண்டும் இணைந்தபோது
தருகின்ற சுகமே வேறு!
குளத்து விரால் மீன்கறி
ஏறு கெழுத்தி பழங்கறியும்
புளிப்போட்டு
குழம்பு வைத்த நெத்திலியும்
தரும் சுவையும் வேறுதானே!
கடைகள் பல போயும்
எங்கும் கிடைக்கலியே
சுவைகள் பல இருந்தும்
தீய்ச்சகறி போலிலையே!
சட்டி கழுவுமுன்னே
உள்ள போட்ட சுடுசோறு
ஒட்டி இருக்கும் கறி
மட்டுமன்றி
ஓரமெலாம் பிரட்டிவரும்
ஏழாம் சுவைக்கலவை
எங்கிருந்தோ கூட்டிவரும்!
கருகிய வாசத்துடன்
கவளமாய் திங்கிறப்போ
ஒருவித திருப்திவரும்
மனமும் தான் ஓடிப்போய்
உள்ளால நிறைந்துவிடும்!
கடைச்சோறு வாங்குவதால்
பளங்கறி கிடைப்பதில்லை
கடையரிசி வாங்குவதால்
இடிஞ்சரிசி கிடைப்பதில்லை!!
அரிக்கிமிலாய்
இருக்கிற குத்திப்பலகை ,
சுரட்டை அகப்பைக்கணை
இதுபோன்ற
அடுக்களை காட்சியெல்லாம்
சாப்பாடு மேசை வர
புளக்கடைக்குள் போனதடா!
பழங்கறிதான் கிடைப்பதில்லை
கறிக்கவிதையாவது
ருசித்திடலாம் வாருங்க எல்லோரும்
ரசித்திடலாம்!
அருஞ்சொல்லில் பதம் இருக்கு
புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்திடுங்க
அருங்காட்சி சாலையிலே
கறிச்சட்டி வைச்சிருக்கு
பாத்துக்கிட்டு தெரிஞ்சுக்கங்க !
மு.இ.உமர் அலி
8 july 2014 — with நிந்தமணாளன் அஷ்ரப்,Lawrence Vasuthevan, Ashraff Puthunagaran and 46 others.
களிமண் சட்டியில
மிளகாய் அரைத்த கறி
முதல்நாள் சமைத்த கறி
அளவாய் தீய்ந்திருக்க
குறுணல் அரிசிச்சோறு
இடையில் குழைஞ்ச சோறு
இரண்டும் இணைந்தபோது
தருகின்ற சுகமே வேறு!
குளத்து விரால் மீன்கறி
ஏறு கெழுத்தி பழங்கறியும்
புளிப்போட்டு
குழம்பு வைத்த நெத்திலியும்
தரும் சுவையும் வேறுதானே!
கடைகள் பல போயும்
எங்கும் கிடைக்கலியே
சுவைகள் பல இருந்தும்
தீய்ச்சகறி போலிலையே!
சட்டி கழுவுமுன்னே
உள்ள போட்ட சுடுசோறு
ஒட்டி இருக்கும் கறி
மட்டுமன்றி
ஓரமெலாம் பிரட்டிவரும்
ஏழாம் சுவைக்கலவை
எங்கிருந்தோ கூட்டிவரும்!
கருகிய வாசத்துடன்
கவளமாய் திங்கிறப்போ
ஒருவித திருப்திவரும்
மனமும் தான் ஓடிப்போய்
உள்ளால நிறைந்துவிடும்!
கடைச்சோறு வாங்குவதால்
பளங்கறி கிடைப்பதில்லை
கடையரிசி வாங்குவதால்
இடிஞ்சரிசி கிடைப்பதில்லை!!
அரிக்கிமிலாய்
இருக்கிற குத்திப்பலகை ,
சுரட்டை அகப்பைக்கணை
இதுபோன்ற
அடுக்களை காட்சியெல்லாம்
சாப்பாடு மேசை வர
புளக்கடைக்குள் போனதடா!
பழங்கறிதான் கிடைப்பதில்லை
கறிக்கவிதையாவது
ருசித்திடலாம் வாருங்க எல்லோரும்
ரசித்திடலாம்!
அருஞ்சொல்லில் பதம் இருக்கு
புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்திடுங்க
அருங்காட்சி சாலையிலே
கறிச்சட்டி வைச்சிருக்கு
பாத்துக்கிட்டு தெரிஞ்சுக்கங்க !
மு.இ.உமர் அலி
8 july 2014 — with நிந்தமணாளன் அஷ்ரப்,Lawrence Vasuthevan, Ashraff Puthunagaran and 46 others.
- Raj Harran, வளர்மதி சிவா, Jawath Saleem and153 others like this.
- Renugadevi Velusamy · 9 mutual friendsவாயில் எச்சில் ஊற பாட்டியின் சமையல் நினைவுக்கு வருகிறது.
- Mohamed Ismail Umar Ali நன்றி Valli Muthu,ஏன் நீங்களும்தான் பாட்டிபோல சமைக்கலாம்தானே Renugadevi Velusamy
- Renugadevi Velusamy · 9 mutual friendsஏங்க மண்பானைல இதுவரைக்கும் சமைச்சதில்ல. இந்த வாரம் சமைக்க முயற்சி செய்யறேன். பாட்டி துணை.
- Uvais Nasly நானும் தான் தினமும் பழங்கறி சாப்பிடுறேன் ஆனால் அந்த மண் சட்டியில சமைத்தது போல் இல்லவே இல்லை
- Lawrence Vasuthevan சட்டி கழுவுமுன்னே
உள்ள போட்ட சுடுசோறு
ஒட்டி இருக்கும் கறி
மட்டுமன்றி
ஓரமெலாம் பிரட்டிவரும்
ஏழாம் சுவைக்கலவை
எங்கிருந்தோ கூட்டிவரும்!
கருகிய வாசத்துடன்
கவளமாய் திங்கிறப்போ
ஒருவித திருப்திவரும்
மனமும் தான் ஓடிப்போய்
உள்ளால நிறைந்துவிடும்! - Mohamed Ismail Umar Ali நீங்க சாப்பிடுவது குளிர்பதனப்பெட்டியிலே குளிர்காய்ந்த அந்நியக்கறி அது நமது உள்நாட்டுக்கறியல்ல Uvais Nasly
- Uvais Nasly அரிக்கிமிலாய்
இருக்கிற குத்திப்பலகை ,
சுரட்டை அகப்பைக்கணை
இதுபோன்ற
அடுக்களை காட்சியெல்லாம்
சாப்பாடு மேசை வர
புளக்கடைக்குள் போனதடா........................அருமையான் வரிகள் கலக்கிட்டிங்க - Shafath Ahmed ம்ஹும் கவிஞரே.. பெருமூச்சுவிட்டு என்ன செய்ய..
இங்கே நாங்கள் நாளும் பொழுதுமாய் குறுனல் சோறு..இடிந்த அரிசிச் சோறு..தீஞ்ச கறி புரட்டிய சோறு..இப்படி நீங்கள் கனவு காணும் அனைத்துமே
நெஞ்சுக்கு நிறைந்து..வயிறு நிறைந்து...கவிஞரே..பெருமூச்சுவிட்டு என்ன செய்ய...? - Uvais Nasly இன்றைக்கி உள்ள நிலைமையில் இப்படியான ஏக்கத்தை வீட்டில் சொன்னாலே வேடிக்கையாக பார்ப்பார்கள்
- கவிஞர் பாசிரா நபில் இதில் உங்கள் புகை படத்தை மட்டும் சுட்டு கொள்கிறேன்
அதற்க்கு ஏற்றவாறு கவிதை தொட்டு வைக்க வருகிறேன் - Mohamed Ismail Umar Ali நன்றி கவிஞர்Shafath Ahmed அவர்களே தாங்களது கொடுப்பினைக்கு, கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்,நாங்களும் இன்னும் பத்துப்பதினைந்து நாளில் வீட்டாக்களை கஷ்டப்படுத்தி சாப்பிடத்தான் போறோம் இன்சா அல்லாஹ் !
- மு.யாகூப் அலி தை பொங்கலுக்கு
விலையாகும்...மற்ற நாளில் கானாமல் போகும் .
பாட்டன் பூட்டன்
சொத்து யிது
பிரிட்டன் காரன்
போன பின்னும்..நம்ம
ஆளுங்கள் (அ)நாகரிகம்
கெட்டதால்.....மறந்தே
போனோம்! - Shafath Ahmed நிந்தவூருக்கு வருகைதரவிருக்கும் எங்கள் கவிஞரை மண்பானைச் சோறு..தீஞ்ச கறி இத்தியாதி படையல்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்!
- Mohamed Ismail Umar Ali பின்னூடத்துக்கு நன்றி Mohamed Janofar,Nazeema Nazeema Naze,மு.யாகூப் அலி ,Mohammad Uwais
- Mohamed Ismail Umar Aliபின்னூட்டத்துக்கு நன்றி Vanitha Solomon Devasigamony அவர்களே
- Lawrence Vasuthevan தண்ணிச் சோறு
------------------------
தண்ணிச் சோறே
தண்ணிச் சோறே
உனை
எண்ணிச் சோர்வேன்
இந்நாள் தனிலே!
நீ
எங்கு போனாய்
என்ன ஆனாய்?
காலை வயிற்றின்
கலியாண வீடே!
இடைத் தீனிகளுக்கு
இடம் வைக்காமல்
மதியம் வரைக்கும்
உந்தன் பாடே...
எத்தனை அவதாரம்
எடுப்பாய் நீ...
கொச்சிக்காய் வெங்காயம்
பச்சையாய் அரிந்து
பருகிட அமுதம் நீ...
சீனியும் தேங்காயும்
சிதறிய நிலவென
வாழைப் பழமுமாய்
வடிவாய் இருப்பாய்நீ...
மஞ்சள் சேலை அணிவாய்
மாம்பழ நாளில்...
பினாட்டு ஊறவைத்து
பிசைந்துன்னை எடுத்தால்
பார்க்கநீ குளம்பாவாய்...
கிண்ணம் பழத்தோடென்றால்
கதையே வேறுதான்...!
வழியற்ற நாட்களில்
பச்சைத் தண்ணிக்கும்
உப்புக்கும் கூடநீ
உடன்பட்டு வருவாயே...
எரிக்கும் கடுவெயிலை
எதிர்த்து நின்றாடி
மாலை வரை
உழைப்பு உயிர்த்துவர
உரம் செய்யும்
எழிமையான வலிமைநீ!
காலை உணவாயின்று
கருவாடு கணக்காய்
காய்ந்து சுருண்ட
ஏதேதோ
இழவுகளுக்கி்டையில்,
கர்ப்பிணிப் பெண்ணாய்
கனிந்த அழகே!
உன்னை நினைக்கிறேன்!!!
நீ
எங்கு போனாய்
என்ன ஆனாய்
என் தண்ணிச் சோறே?! - Mohamed Niyas · 31 mutual friendsIntha thalaimuraiyodu mudinthu viduma ivai ellam????
- Rameeza Mohideen Yaseen உங்க கவிதை வாய் ஊறவைக்குது. நோன்புடன் எதை தொட்டுக்கொள்வதென புரியாமல் தட்டுத்தடுமாறுது மனசு.கொல்லைக்கு போனாலும் மீன்கறிக்குழம்பு மூக்கத்தொலைக்குதே.வாழ்த்த வார்த்தையில்ல. அற்புதம் உமர்
- Ahamed Abdul Kader Ahamed ஏன் ஏன் ஏனுங்க ஓமரு என் வயத்தெரிச்சலயும் என் வயத்துபசியையும் கெளப்புரிங்க
நோன்பு புடிக்கிறமாதிரி எழுதுங்க
தொறக்குரமாதிரி எழுதாதிங்க
அருமை வயறு நேரஞ்சிபோச்சி - Ibra Lebbai Sudu sorum pazangkari thindrakalam malaiyerip poachu. Aana ungakavi thinna thinna suvayo athiga mahchu rushe thanay yenna sholvean! Wazhtthukkal.
- Meera Mahroof !!!”சட்டி கழுவுமுன்னே
உள்ள போட்ட சுடுசோறு
ஒட்டி இருக்கும் கறி
மட்டுமன்றி
ஓரமெலாம் பிரட்டிவரும்
ஏழாம் சுவைக்கலவை
எங்கிருந்தோ கூட்டிவரும்!“.
சாப்பிட்ட மாதிரியே இருக்கு
வாழ்த்துக்கள் உமர் அலி. - Kaleel Rahman Hahaha yevalavu rusi antha sappadil. Athellam yenke ipothu. Aamam nichayamaha
Ilam santhathiku athu theriyathu. Alhana valkai alahana kavithai. Thanks a lot. - Meeraan Ibrahim Tholaaaa...,
Ammila kojjikkaai
Arajjy Aaakina
Anthak kaalam_ippa
Pakkattu kadail
Idyjjee irukku
Inthak kaalam
Pala Virahu Erittu
Saddyil Samayttar
Anthak kaalam_ ippa
Ellaa idamum
Samayel Oru rusee
Inthak kaalam
Kaalay unavu
Panapalam punaadu
Anthak kaalam _ippa
Kaanja Roddiyum
Naarina kary...
Inthak kaalam
Pulloondy mtheeyor
Nadappatha
Kaana mudiyaathu
Ery porul Samayall
Noikalay koddutu
Ilamay kuranjee
Impam mudiyuth
Padikkira pillada
Thala mudy Naraykkutu
Palasa Ninajjaa
Aaasay yaaaha
Varukutu
1000 Nanrikal thakkalku - Kalam Shaick Abdul Kader நாக்கில் ஊறியது உமிழ்; வாக்கில் தேறியது நற்றமிழ்! நோன்பு துறந்த பின்னரே படித்தேன்; சுவைத்தேன்; அப்பமும் நேற்று வைத்த மீன் ஆனமும் கூட்டும் சுவைக்கு ஈடுமுண்டோ? ஏங்குகின்றோம் அந்தக் கிராமத்து மண்சட்டி வாசனைச் சாப்பாட்டை எண்ணி, எண்ணி!
- Cannayane Tamijeselvane · Friends withகவிஞா் கி. பாரதிதாசன். பிரான்சுஅப்படியே சாப்பிடலாம்
- Thaiyeeb Vellaiyan அரிக்கிமிலாய்
இருக்கிற குத்திப்பலகை ,
சுரட்டை அகப்பைக்கணை
இதுபோன்ற
அடுக்களை காட்சியெல்லாம்
சாப்பாடு மேசை வர
புளக்கடைக்குள் போனதடா! - Govind Dhanda என்ன உமர் அலி மீனைப்பற்றிச் சொல்லி ஊறுற எச்சிலில் நாக்கு மீன் போல நீந்துது, அன்றைய நாளின் ஞபகங்கள் நினைவில் நீந்துது!
- றாபியின் கிறுக்கல்கள். நண்பா
நோன்பு திறந்த பிறகே படித்தேன்
உன் கவிதையை.
பசி கெளம்பிடும் என்ற பயத்தால்...
வாழ்த்துக்கள் நண்பா... - Ratha Mariyaratnam ஏன் சகோதரா உங்களுக்கு இந்த வேலை.....நாவூற வைக்கிறீகள்.........இதுவெல்லாம் எனது 10 வயதோடு சரி....எனது அப்பம்மா இறந்தபின் இல்லாது போய் விட்டது......சகோதரா உங்கள் கவிதை கருத்துக்கள் எங்கிருந்து எடுக்கிறீர்கள்.... யாருக்கும் வராத சிந்தனை.....வாழ்த்துக்கள் சகோதரா
- Thaha Maraikayar Nagore · 15 mutual friendsமன்சட்டி சமையலிலே மணமான மீன்குழம்பு எட்டிசென்று போனாலும் இழுக்கும் அந்த கார வாடை அந்தகால முன்னோர்கள் ஆக்கிஉண்ட மண் பாண்டம் ஆரோக்கியம் பழைய மீன்குழம்பை பக்குவமாய் சூடு பண்ணி ஆட்டுகல்லில் அரைத்த ஆப்பம் தோசைக்கும் அப்படியே அள்ளி திண்ட நாக்கு ருசி கருவாடு கத்திரிக்காய் கடல் ராலு பச்சை மாங்கா மொச்சகொட்டை பக்குவாமாய் குழம்பு வைத்தால் மண்சட்டி மணக்கும் மனமெல்லாம் கணக்கும் காலம் மாறிடுச்சு கண்ட உலோகம் பாதிரமாச்சு பழயருசி மாறிடுச்சு பலவித நோய களும் வந்துடுச்சு மண்சட்டியை இனி மாட்டிவைத்த படத்தில்தான் பார்க்கவேணும்
- Ahamed Zacky · 16 mutual friendsஏன்பா இந்த நோன்பு வாயில நாவூற வக்கிறீங்க, அடுக்குமா!
- Mohamed Ahamed Lebbe · 9 mutual friendsஇப்பவுள்ள தலைமுறைக்கு இந்த சுவையெல்லாம் புரியவா போகிறது! நாட்டுக்கோழி கூட விருப்பமில்லை broiler கோழியும் fast food உணவுகளும் chemical மரக்கறிகளும் carbite அடித்த பழ வகையும் ஐஸ் போட்ட மீனும் தானே இப்போ நகர் புறங்களில் கிடைக்கிறது.
- Ashraff Puthunagaran பழங்கறிதான் கிடைப்பதில்லை
கறிக்கவிதையாவது
ருசித்திடலாம் வாருங்க எல்லோரும்
ரசித்திடலாம்! ருசியான கவிதை.........................!
0 கருத்துக்கள்:
Post a Comment