கிராமத்து ஒப்பாரி
.............
அழுகையை அழகாக
இசயைமத்து அவர்கள்
அவதியில் பாடும் பாட்டு
அதுக்கு இருக்கிறது
வெவ்வேறு மெட்டு
கல்லும் கரையும்
அதைக்கேட்டு
திட்டலிருக்கும் அங்கு
திமிறலிருக்கும்
நெட்டை இருக்கும்
உள்ளக் குமுறலிருக்கும்
கண்கெட வேண்டிடுவார்
இடிவிழவும் கூறிடுவார்
கூண்டோட குடியழிய
கொடுஞ்சாபம் கொடுத்திடுவார்
அழுத குரலோடு !
இல்லற்று இறப்பற்று
மண்டற்று மனையற்று
மங்கிடவும் இறைவனைக்
கேட்டழுவார்
இழுவையும் இருக்கும்
இடைக்கிடை
தொழுகையோடு கூடிய
குலுக்கமும் இருக்கும்
மாரிலடிப்பார் கதறி
பாரடி என் நிலையென்று விழிப்பார்
பேரிடி வீழ்ந்ததே இனி என்
நிலை என்னடி என்று துடிப்பார்!
மண்ணள்ளி வீசி
மண்போல போயிடுவாய்
போற நீ வரமாட்டாய்
பொணமாத்தான் நீ வருவாய்
மண்ணிலடிப்பாள்
இது சத்தியம் என்பாள்!
வீட்டு நிலையிலே முட்டுவாள்
கட்டாந் தரையிலே புரளுவாள்
தலைவிரி கோலமாக அழுகுமவள்
விரைவிலே ஓயமாட்டாள்
யார் தடுத்தாலும் கேட்கமாட்டாள் !
குடித்துவிட்டு தினம்
அடிக்கின்ற கணவனை
திருப்பி அடிக்க முடியாமல்
அழுகையாலே அவளடித்தால்
அது ஒப்பாரி
படிக்காம திரிகின்ற
விடல மகன்
படிக்கவில்லை என்றதால
வெடிக்கின்ற நெஞ்சோடு
படிக்கட்டில் இருந்தழுதால்
அது ஒப்பாரி !
பொது வேலிச் சண்டையிலே
அநியாயம் நடந்ததெண்டு
கதை சொல்லி அவ அழுதால்
அது ஒப்பாரி !
புதுச்சட்டை வேணும் எண்டு
புரியாத பிள்ளையொண்று
பெருநாளில் அடம் பிடிக்க
அது வாங்க முடியாம
மனமுடைந்து அவளழுதால்
அது ஒப்பாரி!
கைவிட்டு போனவனை
காலமெலாம் காத்திருந்து
மை இருட்டில் அவளிருந்து
கால் நீட்டிப்போடுக்கொண்டு
அவளழுதால் அது ஒப்பாரி !
குடும்பத்து ஆக்களோட
கூட்டாக கட்டிக்கொண்டு
கதைசொல்லி அழுவார்கள்
அதை பார்க்க நமக்கும்
தன்னாலே அழுகை வரும்
கண்ணாலே தண்ணி வரும்
அது ஒப்பாரி
கடலுக்கு போனவனை
கடல் கொண்டு போனதென்று
கடன் தொல்லை தீரும்வரை
போகுமிடம் எல்லாம்
சொல்லி அழுவாள்
அது ஒப்பாரி
கரையேற முடியாமல்
குடிலுக்குள் இருக்கின்ற
குமருப் பிள்ளைகளை
கரை சேர்ப்பாய் ஆண்டவனே
கரம் ஏந்தி வரம் கேட்டு
அவளழுவால்
அது ஒப்பாரி
வயலுக்கு போனவனை
வரம்பிலே பாம்பு கொத்த,
சிரிச்சிக்கிட்டு போன மச்சான்
உசிரில்லா உடம்பாக
சிலிர்த்துப்போய் வந்தபோது
பித்துப் பிடித்தவளாய்
பிதற்றி அழுவாளே
அது ஒப்பாரி !
அப்பாவி அவள் கணவன்
செய்யாத குற்றத்தில்
சிறைவாசம் செல்கின்றான்
சட்டத்தை நொந்தவளோ
திட்டி அழுகின்றாள்
அது ஒப்பாரி!
சொந்தங்கள் சூடு சுட
பந்தங்கள் தூரம் செல
தங்காமல் அவள் புலம்பியழுகின்றால்
அது ஒப்பாரி!
பருவ வயது மகள்
பாதையாலே போனவனை
காதலித்த கதை கண்டு
மானம் போகுதென்று
மனம் பதறி அவளழுதால்
அது ஒப்பாரி !
மழை விட்ட பின்னே தூவானம்
ஏழை அழுத பின்னே புஸ்வாணம்
அழுது முடித்தால்தான்
ஆத்திரம் அவதியாகும்
மனதில் கனங்குறையும்
ஒப்பாரி முடிந்த பின்னால்
விக்கி விக்கி அவள் அழுவாள்
இடை வெளி விட்டு
அவள் மனம் தளர்வாள்!
ஏழையாகப் படைத்ததுக்கு
இறைவனுக்கு கண்கெடுமாம்
எவ்வளவு தைரியம்
ஒப்பாரியின் துணைகொண்டு
எங்கெலாம் போறாங்க
அந்தக் கத நீங்க நின்று கேளுங்க!
மு.இ.உமர் அலி
2014 june 3
கிழக்குமாகாண முஸ்லீம் கிராமங்களில்காலாகாலமாக ஒப்பாரி ஒரு சுய உளநல ஆரோக்ய செயற்பாடாக இருந்து வந்துள்ளது.அவர்களுக்கு தாள முடியாத துக்கம் வரும்போது இவர்கள் இவ்வாறு ஒப்பாரி வைத்து அலுத்து தமது மனக்கவலையை ஆற்றிக்கொள்வார்கள்.சிரிப்ப ைப்போன்று அழுகை நமக்கு இறைவன் கொடுத்த ஒரு பெரும்கொடை — with Rameeza Mohideen Yaseen, Lagan Sc, Muhammadh Ameer Anzil and 44 others.
.............
அழுகையை அழகாக
இசயைமத்து அவர்கள்
அவதியில் பாடும் பாட்டு
அதுக்கு இருக்கிறது
வெவ்வேறு மெட்டு
கல்லும் கரையும்
அதைக்கேட்டு
திட்டலிருக்கும் அங்கு
திமிறலிருக்கும்
நெட்டை இருக்கும்
உள்ளக் குமுறலிருக்கும்
கண்கெட வேண்டிடுவார்
இடிவிழவும் கூறிடுவார்
கூண்டோட குடியழிய
கொடுஞ்சாபம் கொடுத்திடுவார்
அழுத குரலோடு !
இல்லற்று இறப்பற்று
மண்டற்று மனையற்று
மங்கிடவும் இறைவனைக்
கேட்டழுவார்
இழுவையும் இருக்கும்
இடைக்கிடை
தொழுகையோடு கூடிய
குலுக்கமும் இருக்கும்
மாரிலடிப்பார் கதறி
பாரடி என் நிலையென்று விழிப்பார்
பேரிடி வீழ்ந்ததே இனி என்
நிலை என்னடி என்று துடிப்பார்!
மண்ணள்ளி வீசி
மண்போல போயிடுவாய்
போற நீ வரமாட்டாய்
பொணமாத்தான் நீ வருவாய்
மண்ணிலடிப்பாள்
இது சத்தியம் என்பாள்!
வீட்டு நிலையிலே முட்டுவாள்
கட்டாந் தரையிலே புரளுவாள்
தலைவிரி கோலமாக அழுகுமவள்
விரைவிலே ஓயமாட்டாள்
யார் தடுத்தாலும் கேட்கமாட்டாள் !
குடித்துவிட்டு தினம்
அடிக்கின்ற கணவனை
திருப்பி அடிக்க முடியாமல்
அழுகையாலே அவளடித்தால்
அது ஒப்பாரி
படிக்காம திரிகின்ற
விடல மகன்
படிக்கவில்லை என்றதால
வெடிக்கின்ற நெஞ்சோடு
படிக்கட்டில் இருந்தழுதால்
அது ஒப்பாரி !
பொது வேலிச் சண்டையிலே
அநியாயம் நடந்ததெண்டு
கதை சொல்லி அவ அழுதால்
அது ஒப்பாரி !
புதுச்சட்டை வேணும் எண்டு
புரியாத பிள்ளையொண்று
பெருநாளில் அடம் பிடிக்க
அது வாங்க முடியாம
மனமுடைந்து அவளழுதால்
அது ஒப்பாரி!
கைவிட்டு போனவனை
காலமெலாம் காத்திருந்து
மை இருட்டில் அவளிருந்து
கால் நீட்டிப்போடுக்கொண்டு
அவளழுதால் அது ஒப்பாரி !
குடும்பத்து ஆக்களோட
கூட்டாக கட்டிக்கொண்டு
கதைசொல்லி அழுவார்கள்
அதை பார்க்க நமக்கும்
தன்னாலே அழுகை வரும்
கண்ணாலே தண்ணி வரும்
அது ஒப்பாரி
கடலுக்கு போனவனை
கடல் கொண்டு போனதென்று
கடன் தொல்லை தீரும்வரை
போகுமிடம் எல்லாம்
சொல்லி அழுவாள்
அது ஒப்பாரி
கரையேற முடியாமல்
குடிலுக்குள் இருக்கின்ற
குமருப் பிள்ளைகளை
கரை சேர்ப்பாய் ஆண்டவனே
கரம் ஏந்தி வரம் கேட்டு
அவளழுவால்
அது ஒப்பாரி
வயலுக்கு போனவனை
வரம்பிலே பாம்பு கொத்த,
சிரிச்சிக்கிட்டு போன மச்சான்
உசிரில்லா உடம்பாக
சிலிர்த்துப்போய் வந்தபோது
பித்துப் பிடித்தவளாய்
பிதற்றி அழுவாளே
அது ஒப்பாரி !
அப்பாவி அவள் கணவன்
செய்யாத குற்றத்தில்
சிறைவாசம் செல்கின்றான்
சட்டத்தை நொந்தவளோ
திட்டி அழுகின்றாள்
அது ஒப்பாரி!
சொந்தங்கள் சூடு சுட
பந்தங்கள் தூரம் செல
தங்காமல் அவள் புலம்பியழுகின்றால்
அது ஒப்பாரி!
பருவ வயது மகள்
பாதையாலே போனவனை
காதலித்த கதை கண்டு
மானம் போகுதென்று
மனம் பதறி அவளழுதால்
அது ஒப்பாரி !
மழை விட்ட பின்னே தூவானம்
ஏழை அழுத பின்னே புஸ்வாணம்
அழுது முடித்தால்தான்
ஆத்திரம் அவதியாகும்
மனதில் கனங்குறையும்
ஒப்பாரி முடிந்த பின்னால்
விக்கி விக்கி அவள் அழுவாள்
இடை வெளி விட்டு
அவள் மனம் தளர்வாள்!
ஏழையாகப் படைத்ததுக்கு
இறைவனுக்கு கண்கெடுமாம்
எவ்வளவு தைரியம்
ஒப்பாரியின் துணைகொண்டு
எங்கெலாம் போறாங்க
அந்தக் கத நீங்க நின்று கேளுங்க!
மு.இ.உமர் அலி
2014 june 3
கிழக்குமாகாண முஸ்லீம் கிராமங்களில்காலாகாலமாக ஒப்பாரி ஒரு சுய உளநல ஆரோக்ய செயற்பாடாக இருந்து வந்துள்ளது.அவர்களுக்கு தாள முடியாத துக்கம் வரும்போது இவர்கள் இவ்வாறு ஒப்பாரி வைத்து அலுத்து தமது மனக்கவலையை ஆற்றிக்கொள்வார்கள்.சிரிப்ப
0 கருத்துக்கள்:
Post a Comment