சாத்தானின் தத்துப்பிள்ளை
தறிகெட்டு கூத்தாட
பார்த்தும் பாராததாக
பராமுகமாய் சாத்தானோ!
குருதி தோய்ந்த படங்களை
பார்த்து பரவசித்தும்
அழுகையோடு அவலங்களை
கேட்டு மனங்குளிர்ந்தும்
பேயாட்டம் ரசிக்கும்
சாத்தானே
உன்னாட்டில் ஒருயிர்க்கு
மலைவிலை
அப்பாவி அழிந்தொழியும்
பலஸ்தீனில் விலையிலையா?
முடிக்கப்படவேண்டிய
நூலுக்கு
முடிவுரை எழுதாமல்
அதன்
சரித்திரப் பக்கங்களை
குருதியால் நிரப்புகிறாய்
அவர்களின் கண்ணீரால்
உன் பாவக்கரங்களை
கழுவிக் களிக்கின்றாய்!
சிலநாட்டில் வலுவாக
வலிந்து சென்று சட்டம்செய்யும் நீ
வலுவான காட்சி கண்டும்
வாய்பொத்தி நிற்கின்றாய்!
அரேபியர்களின் எச்சில் பொறுக்கியே
இன்னும் விழிக்காமல்
உறங்கிக்கொண்டிருக்கும்
உனது அரேபிய
எஜமான்கள் என்ன செய்கிறார்கள்?
இன்னும் உனக்கு
உத்தரவிட்டாமல்
உனது பசப்பு வார்த்தைகளில்
புலன்களை அடகுவைத்துக்கொண்டு
அந்தப்புரங்களில்
விழித்துக்கொண்டே உறங்குகிறார்களா?
காசாவின் அழுகுரல்
அவர்களது மரத்த மண்டைகளில்
இடியாக இறங்கவிலையா
Mohamed Ismail Umar Ali
2014 July 11
தறிகெட்டு கூத்தாட
பார்த்தும் பாராததாக
பராமுகமாய் சாத்தானோ!
குருதி தோய்ந்த படங்களை
பார்த்து பரவசித்தும்
அழுகையோடு அவலங்களை
கேட்டு மனங்குளிர்ந்தும்
பேயாட்டம் ரசிக்கும்
சாத்தானே
உன்னாட்டில் ஒருயிர்க்கு
மலைவிலை
அப்பாவி அழிந்தொழியும்
பலஸ்தீனில் விலையிலையா?
முடிக்கப்படவேண்டிய
நூலுக்கு
முடிவுரை எழுதாமல்
அதன்
சரித்திரப் பக்கங்களை
குருதியால் நிரப்புகிறாய்
அவர்களின் கண்ணீரால்
உன் பாவக்கரங்களை
கழுவிக் களிக்கின்றாய்!
சிலநாட்டில் வலுவாக
வலிந்து சென்று சட்டம்செய்யும் நீ
வலுவான காட்சி கண்டும்
வாய்பொத்தி நிற்கின்றாய்!
அரேபியர்களின் எச்சில் பொறுக்கியே
இன்னும் விழிக்காமல்
உறங்கிக்கொண்டிருக்கும்
உனது அரேபிய
எஜமான்கள் என்ன செய்கிறார்கள்?
இன்னும் உனக்கு
உத்தரவிட்டாமல்
உனது பசப்பு வார்த்தைகளில்
புலன்களை அடகுவைத்துக்கொண்டு
அந்தப்புரங்களில்
விழித்துக்கொண்டே உறங்குகிறார்களா?
காசாவின் அழுகுரல்
அவர்களது மரத்த மண்டைகளில்
இடியாக இறங்கவிலையா
Mohamed Ismail Umar Ali
2014 July 11
0 கருத்துக்கள்:
Post a Comment