மாமியும் மருகியும்!
அழகிலே
பெண்ணுக்குப் பெண்ணே
பேராசை கொள்வதை அன்று
பண்ணாகச் சொன்னான் அந்தக்கவி!
ஆட்சியிலே
பேராசை கொண்டு
சில குடும்பம் அழிவதை இன்று
குறுக்கிச் சொல்லுது இந்தக்கவி !
மாமியும் பெண்தான்
மருகியும் பெண்தான்
இன்றைய மாமி நேற்றைய மருகி
இன்றைய மருகி நாளைய மாமி
எல்லாமே சக்கரம் !
இதிலில்லை மந்திரம்!
பூனையப்போல வந்தாள்
இப்போ புலி மாதிரி மாறினாள்
இது மாமியார் கூற்று
புன்னகை செய்தாள் பொட்டும்
வைத்தாள் பூவாக என்னை
போற்றிக்காத்தாள்
என்னவோ தெரியல
இப்போ எரிந்து விளுவிறாள்
எடுத்ததெற்கெல்லாம்
என்மேல் பாய்கிறாள்
மருமகள் கூற்று!
ஒவ்வொருவர் உச்சியிலும்
ஆளுக்காள் மாறி மாறி
கொச்சிக்காய் அரைக்கிறார்கள்!
எச்சித்தண்ணி ஊற்றுவதிலும்
பச்சத்தண்ணி குடிப்பதிலும்
உப்புச்சப்பில்லாமல் சண்டை !
சீரியல் பார்ப்பதிலும்
சீவி முடிப்பதிலும்
சின்னச்சின்னைச் சண்டை !
வெற்றிலை படிக்கமும்
சோற்றிலே உப்பிலை என்பதும்
அடிக்கடி சண்டையின்
மிடுக்கான காரணங்கள்!
சோடனை கூடவாம்
மருமகளை மாமி எப்பவும்
குறைதான் சொல்லுறா!
சாடைதான் பேசுவா,எப்பவும்
சந்திலே முகவாயை முட்டுவா
மருமகள் சொல்லுறா!
போரியல் சரித்திரங்கள்
இது போல சம்பவங்கல்
வராற்றுப்பின்னணியில்
எக்கச்சக்கம்
அதனால் வந்ததே
உச்சக்கட்டம்!
மருமகளைக் குறைகூறும் மாமியாரும்
மாமியைக்குறைகூறும் மருமகளும்
கொண்டைகளைப் பிடித்திழுத்து
சண்டையும் பிடிப்பார்கள் சிலவேளை !
கொதிக்கின்ற வார்த்தைகளை
வாயாலே கொட்டி விட்டு
எரிக்கின்ற பார்வையினால்
எஞ்சியதை அழிப்பார்கள்!
மற்றவர் பார்க்கையிலே
நடிக்கின்ற சோடி இது
உற்றவர் உணரும்வரை
நடக்கின்ற யுத்தமிது!
இழந்ததை பெற்றிட
அம்மாவின் ஆட்டம்
பெற்றதை நிலை நாட்டிட
மனைவியின் தேட்டம் !
சிந்திய மூக்கோடு குந்தி
மகனிடம் செய்யாத வேலையை
செய்ததாய்ச் சொல்லுறால் அன்னை !
மனைவியோ சிவந்த முகத்தோடு அழுது
அகந்தை பிடித்தவள் உன்தாய்
அறைந்தாளே என்னை கையால்
முகத்தைக்காட்டுவாள் திரும்பி !
தாயா தாரமா
தர்மத்தின் யுத்தம் தனயனுக்குள்ளே
ஓயாத சத்தம் உள்ளத்தினுள்ளே
நித்திரை போச்சு
நிம்மதி போச்சு
செத்திடலாம் என்று
அவன் மனம் எண்ணவுமாச்சு!
மு.இ.உமர் அலி
13 July 2014 — with Ashraff Khan, Jalaldeen Mahakavi,Mm.mohamed Kamil and 43 others.
அழகிலே
பெண்ணுக்குப் பெண்ணே
பேராசை கொள்வதை அன்று
பண்ணாகச் சொன்னான் அந்தக்கவி!
ஆட்சியிலே
பேராசை கொண்டு
சில குடும்பம் அழிவதை இன்று
குறுக்கிச் சொல்லுது இந்தக்கவி !
மாமியும் பெண்தான்
மருகியும் பெண்தான்
இன்றைய மாமி நேற்றைய மருகி
இன்றைய மருகி நாளைய மாமி
எல்லாமே சக்கரம் !
இதிலில்லை மந்திரம்!
பூனையப்போல வந்தாள்
இப்போ புலி மாதிரி மாறினாள்
இது மாமியார் கூற்று
புன்னகை செய்தாள் பொட்டும்
வைத்தாள் பூவாக என்னை
போற்றிக்காத்தாள்
என்னவோ தெரியல
இப்போ எரிந்து விளுவிறாள்
எடுத்ததெற்கெல்லாம்
என்மேல் பாய்கிறாள்
மருமகள் கூற்று!
ஒவ்வொருவர் உச்சியிலும்
ஆளுக்காள் மாறி மாறி
கொச்சிக்காய் அரைக்கிறார்கள்!
எச்சித்தண்ணி ஊற்றுவதிலும்
பச்சத்தண்ணி குடிப்பதிலும்
உப்புச்சப்பில்லாமல் சண்டை !
சீரியல் பார்ப்பதிலும்
சீவி முடிப்பதிலும்
சின்னச்சின்னைச் சண்டை !
வெற்றிலை படிக்கமும்
சோற்றிலே உப்பிலை என்பதும்
அடிக்கடி சண்டையின்
மிடுக்கான காரணங்கள்!
சோடனை கூடவாம்
மருமகளை மாமி எப்பவும்
குறைதான் சொல்லுறா!
சாடைதான் பேசுவா,எப்பவும்
சந்திலே முகவாயை முட்டுவா
மருமகள் சொல்லுறா!
போரியல் சரித்திரங்கள்
இது போல சம்பவங்கல்
வராற்றுப்பின்னணியில்
எக்கச்சக்கம்
அதனால் வந்ததே
உச்சக்கட்டம்!
மருமகளைக் குறைகூறும் மாமியாரும்
மாமியைக்குறைகூறும் மருமகளும்
கொண்டைகளைப் பிடித்திழுத்து
சண்டையும் பிடிப்பார்கள் சிலவேளை !
கொதிக்கின்ற வார்த்தைகளை
வாயாலே கொட்டி விட்டு
எரிக்கின்ற பார்வையினால்
எஞ்சியதை அழிப்பார்கள்!
மற்றவர் பார்க்கையிலே
நடிக்கின்ற சோடி இது
உற்றவர் உணரும்வரை
நடக்கின்ற யுத்தமிது!
இழந்ததை பெற்றிட
அம்மாவின் ஆட்டம்
பெற்றதை நிலை நாட்டிட
மனைவியின் தேட்டம் !
சிந்திய மூக்கோடு குந்தி
மகனிடம் செய்யாத வேலையை
செய்ததாய்ச் சொல்லுறால் அன்னை !
மனைவியோ சிவந்த முகத்தோடு அழுது
அகந்தை பிடித்தவள் உன்தாய்
அறைந்தாளே என்னை கையால்
முகத்தைக்காட்டுவாள் திரும்பி !
தாயா தாரமா
தர்மத்தின் யுத்தம் தனயனுக்குள்ளே
ஓயாத சத்தம் உள்ளத்தினுள்ளே
நித்திரை போச்சு
நிம்மதி போச்சு
செத்திடலாம் என்று
அவன் மனம் எண்ணவுமாச்சு!
மு.இ.உமர் அலி
13 July 2014 — with Ashraff Khan, Jalaldeen Mahakavi,Mm.mohamed Kamil and 43 others.
0 கருத்துக்கள்:
Post a Comment