நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, July 8, 2014

பொய்ப்புழுக்கள்

பொய்ப்புழுக்கள்
பிரசவிக்கப்படுகின்றன
ஆனால் வரவேற்போ
மெய்ப்பூக்கள்
பிறப்பது போலல்லவா இருக்கிறது!

நெளிந்துதிரியும் அவை
கொழுத்திருப்பது உண்மைகளை
மென்று விழுங்கித்தானே!

நெளியும் போது
தெரியும் பளபளப்பில்
கண்சுளுக்கி
வழுக்கி விழுந்தவர்கள்
அயர்ந்து தூங்கிவிட்டனர்!

தாமதித்த மூளை
தட்டுத்தடுமாறி
தன்னைத்தானே
கசக்கிக் கொண்டு
விழித்துபார்க்கையில்
வாழ்க்கை
வெகுதூரம் சென்றிருந்தது!
வாய்மை
வெற்றியை அடைந்திருந்தது!

0 கருத்துக்கள்:

Post a Comment