பொய்ப்புழுக்கள்
பிரசவிக்கப்படுகின்றன
ஆனால் வரவேற்போ
மெய்ப்பூக்கள்
பிறப்பது போலல்லவா இருக்கிறது!
நெளிந்துதிரியும் அவை
கொழுத்திருப்பது உண்மைகளை
மென்று விழுங்கித்தானே!
நெளியும் போது
தெரியும் பளபளப்பில்
கண்சுளுக்கி
வழுக்கி விழுந்தவர்கள்
அயர்ந்து தூங்கிவிட்டனர்!
தாமதித்த மூளை
தட்டுத்தடுமாறி
தன்னைத்தானே
கசக்கிக் கொண்டு
விழித்துபார்க்கையில்
வாழ்க்கை
வெகுதூரம் சென்றிருந்தது!
வாய்மை
வெற்றியை அடைந்திருந்தது!
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment