என்ன இது ?
மலைகளாக குவிந்திருந்தன
சமைத்த தானியங்களும்
பழுத்த கனிவகைகளும்
பல வர்ண பழச்சாறுகளும்
குளைந்த கஞ்சிகளும்
அழையப்படாத ஆனால்
பெயர் அறியாத உண்டிகளும்
எல்லாம் சுவையானவைதான்
நல்ல மணமானவையும்தான் ,
முழு இலைகளில்
பரப்பப்பட்டிருந்தவைகளில்
பாதி மட்டுமே
சில வினாடிகளில்
இரையாகிப்போக
எஞ்சியவை இறைந்து கிடக்கின்றன
உண்ணப்பட வேண்டியவைகள்
கண்களால் கூட தீண்டப்படாமலும்
பருகப்பட வேண்டியவைகள்
ஏறெடுத்துக்கூட கூட பார்க்கப்படாமலும்
எச்சமாக ,மிச்சமாக
ஐயோ எவ்வளவு எவ்வளவு !
பாவம் இந்த பட்சணங்களா
இல்லை பாவம் மறந்தவர்தான்
இச்சனங்களா?
எதற்காக இவை பிரசவிக்கப்படுகின்றன
குப்பைத்தொட்டிக்குள் வீசி
கொல்லப்படுவதற்கா ?
கொடுப்பதற்கு கொஞ்சம் கூட
விருப்படாதவர்கள்
எடுப்பதற்கு கிஞ்சித்தும்
விருப்பமில்லாதவர்கள்!
அந்தப்பெரும் கவளங்களும்
உருண்டைகளும்
நிச்சயமாக ஈக்களுக்கும் எறும்புகளுக்கும்
மிகப்பெரியனவாகவே இருக்கும்!
கழிக்கப்பட்டு மூச்சடைக்கும்வரை
கறுப்புப்பைகளுக்குள் கட்டப்பட்டு
கிடந்குகளினுள் அடங்கி
எங்கோ வறண்ட பாலைவனத்தில்
உயிருடனே சமாதியாகப்போகின்ற
கைபடாத கன்னி உணவுகளின்
நாமங்கள்கூட அறியாத
பல கோடி மனிதர்கள் உலகின் கோடிகளில்
வறுமை ராஜ்யத்தின்
உரிமைக்கொடியை
உயர்த்திபிடித்துக்கொண்டு
பசி பசியென்று
பட்டிணிக் கோசம் உச்சரிக்கிறார்கள் !
வணக்கத்தின் பெயரால்
உணவு துவம்சிக்கப்படுகின்றது
இல்லை இல்லை துஷ்பிரயோகிக்கப்படுகிறது
கொட்டித்தீர்க்கப்படுகிறது
இதைப்பார்த்து தட்டிக்கழப்பதா
இல்லை திட்டித்தீர்ப்பதா
என்னை நானே நொந்துகொள்கிறேன் !
மு.இ.உமர் அலி
2014 July 6th — with Ssm Rafeek, Razana Manaf,Rijan Muhammadh and 46 others.
மலைகளாக குவிந்திருந்தன
சமைத்த தானியங்களும்
பழுத்த கனிவகைகளும்
பல வர்ண பழச்சாறுகளும்
குளைந்த கஞ்சிகளும்
அழையப்படாத ஆனால்
பெயர் அறியாத உண்டிகளும்
எல்லாம் சுவையானவைதான்
நல்ல மணமானவையும்தான் ,
முழு இலைகளில்
பரப்பப்பட்டிருந்தவைகளில்
பாதி மட்டுமே
சில வினாடிகளில்
இரையாகிப்போக
எஞ்சியவை இறைந்து கிடக்கின்றன
உண்ணப்பட வேண்டியவைகள்
கண்களால் கூட தீண்டப்படாமலும்
பருகப்பட வேண்டியவைகள்
ஏறெடுத்துக்கூட கூட பார்க்கப்படாமலும்
எச்சமாக ,மிச்சமாக
ஐயோ எவ்வளவு எவ்வளவு !
பாவம் இந்த பட்சணங்களா
இல்லை பாவம் மறந்தவர்தான்
இச்சனங்களா?
எதற்காக இவை பிரசவிக்கப்படுகின்றன
குப்பைத்தொட்டிக்குள் வீசி
கொல்லப்படுவதற்கா ?
கொடுப்பதற்கு கொஞ்சம் கூட
விருப்படாதவர்கள்
எடுப்பதற்கு கிஞ்சித்தும்
விருப்பமில்லாதவர்கள்!
அந்தப்பெரும் கவளங்களும்
உருண்டைகளும்
நிச்சயமாக ஈக்களுக்கும் எறும்புகளுக்கும்
மிகப்பெரியனவாகவே இருக்கும்!
கழிக்கப்பட்டு மூச்சடைக்கும்வரை
கறுப்புப்பைகளுக்குள் கட்டப்பட்டு
கிடந்குகளினுள் அடங்கி
எங்கோ வறண்ட பாலைவனத்தில்
உயிருடனே சமாதியாகப்போகின்ற
கைபடாத கன்னி உணவுகளின்
நாமங்கள்கூட அறியாத
பல கோடி மனிதர்கள் உலகின் கோடிகளில்
வறுமை ராஜ்யத்தின்
உரிமைக்கொடியை
உயர்த்திபிடித்துக்கொண்டு
பசி பசியென்று
பட்டிணிக் கோசம் உச்சரிக்கிறார்கள் !
வணக்கத்தின் பெயரால்
உணவு துவம்சிக்கப்படுகின்றது
இல்லை இல்லை துஷ்பிரயோகிக்கப்படுகிறது
கொட்டித்தீர்க்கப்படுகிறது
இதைப்பார்த்து தட்டிக்கழப்பதா
இல்லை திட்டித்தீர்ப்பதா
என்னை நானே நொந்துகொள்கிறேன் !
மு.இ.உமர் அலி
2014 July 6th — with Ssm Rafeek, Razana Manaf,Rijan Muhammadh and 46 others.
0 கருத்துக்கள்:
Post a Comment