நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, July 5, 2014

பெண்

.பெண்
அவளுக்கு வியாக்யானம் எழுதவா ...?
வானத்தின் ஏழு அடுக்குகளையும்
என்னிடத்தில் எடுத்துவாருங்கள்
என் முன்னே அவற்றை
காகிதமாய் விரித்துத் தாருங்கள்
ஏழு கடல்களையும் கவர்ந்து வந்து
எனது எழுத்து கோலினை
நிரப்பிப் பாருங்கள்
எழுதிப்பார்க்கலாம்
கற்பனை அருவியொன்றை
எனக்காக உருவாக்குங்கள்
நீந்திப்பார்க்கலாம்
இல்லை இல்லை........................
இவை எதுவுமே போதாது
இன்னும் இரண்டு மூன்று ஆயுட்களை
எனக்கு இரவல் தாருங்கள்
முயன்று பார்க்கிறேன்
முடியாவிட்டால்
மரணித்தபின் அறிந்து
கண்டதை
கனவில்வந்து கதையாகச் சொல்கிறேன்
குறித்துக்கொள்ளுங்கள்!

0 கருத்துக்கள்:

Post a Comment